Friday, August 5, 2016

Bandipur, Iruppu Falls, Kabini Dam - 1

உடன் பணிபுரிபவரின் கல்யாணத்திற்க்காக வயநாடு செல்ல வேண்டி இருந்தது அதனுடன் இன்னும் சில இடங்களை தேர்வு செய்து அரை குறை திட்டத்துடன் எங்கள் பயணம் ஆரம்பமானது.
காலைல 5.30க்கு எல்லாரும் ஆபீசு கிட்ட வந்துடனும், யாரும் லேட் பண்ண கூடாது OK வா...காலைல நான் ஆபீஸ் கிட்ட போகும்போது மணி 6.30. நானாவது சைக்கிள்ல பெல் இல்லம்தான் வரேன், ஒருத்தன் சைக்கிளே இல்லாம வரான்னு சொல்லற மாதிரி ஒருத்தன் 7.30க்கு வரான். அப்படியே அவனை தூக்கி வண்டில போட்டு ஒரு கும்மு கும்மிட்டு என்ஜின் ஸ்டார்ட் ஆனது 7.40...டிராபிக் இல்லாத பெங்களூர்ல காலை பயணம் கண்டிப்பா நீங்க அனுபவிக்க வேண்டியது...என்னா ஜில்லு! என்னா ஜில்லு!

அது  என்ன மாயமோ மந்திரமோ தெரியல எப்போ மைசூர் ரோடு போனாலும் பிடதில (நம்ம நித்தியானந்தா இருக்கற அதே பிடதி தான்) தட்ட இட்லி சாப்பிட்டு போறது ஒரு பழக்கமா போச்சி, சும்மா சொல்ல கூடாது இட்லி சுமார்தான். டிபன் சாப்பிட்டு என்ன வண்டி ஓட்ட விடாம 30நிமிடத்திற்கு ஒருதடவை கார நிறுத்த சொல்லி டீ குடிக்கறது போட்டோ எடுக்கறதுனு பசங்க ஒரே அலும்பு, எந்த கமிட்மெண்டும் இல்லாம பயணம் செய்யறது கூட நல்ல இருந்தது.

ஏற்கனவே பண்டிபூர் வழியான பயணம் சென்றிருந்தாலும் இந்த முறை நண்பர்களோடு சென்றது ரொம்ப ஜாலி...அதுலயும் பயண அனுபவமமே  இல்லாத ரெண்டு பேர வச்சு செமயா கிண்டல் பண்ணிட்டு சிரிச்சுட்டு போனதுல வயிறு புண்ணாச்சி. இந்த காட்ட கடக்கும் போது ஹார்ன் அடிக்க கூடாது, தம் அடிக்க கூடாது, தண்ணி அடிக்க கூடாது, வண்டிய நடுவுல நிறுத்த கூடாது விலங்குகளுக்கு சாப்பாடு கொடுக்க கூடாது....இப்படி ஏகப்பட்ட கூடாது கூடாது கூடாது....இதை எல்லாம் செக்கபோஸ்ட்ல சொல்லி அனுப்புறாங்க...ஆனா வழில ரெண்டு மூணு கார நிறுத்தி இறங்கி போட்டோ எடுத்ததை பார்க்க நேர்ந்தது, இத பார்த்துட்டு நாமும் இறங்கலாமுன்னு பசங்க சொன்னாங்க அதுக்கு நான் சொன்ன பதில் "நோ". நம்ம நின்னா நம்மள பார்த்துட்டு இன்னும் நாலு பேரு (அது என்ன நாலு பேரு நாப்பது பேருன்னு வச்சிக்கலாம்) நிற்பான். நாங்க கார்லா இருந்த படியே கிளிக்கிட்டு போனதுல மான், மயிலு கிளிக்க முடிஞ்சுது. யானை பாக்கனும்ம்னா காலை நேரத்துல வரணும்.
நம்ம கிளம்புன நேரத்துக்கு யானையோட சாணி தான் பாக்க முடிஞ்சுது.



 இப்படியே அடர்ந்த காட்டில வழி கேக்க கூட ஆல் இல்லாம ஒருவழியா இருப்பு நீர்வீழ்ச்சி அடைந்தோம். எங்க கரோட சேர்த்து ஒரு பத்து வண்டி தான் அந்த பார்கிங்கில இருந்துது. 5ரூபா டிக்கெட் வாங்கி அருவியை நோக்கி நடக்க ஆரம்பிச்சோம். முதலில் எங்களை வர வரவேற்றது கரும்பச்சை தேள்.
இந்த தேளுக்கு எட்டு காலு ஒரு வாலுன்னு சொல்லி போர் அடிக்காம மேட்டருக்கு வரேன். நார்மலா நம்ம ஊருக்குள்ள இருக்கற தேளுக்கு விஷம் ரொம்ப கம்மிதான் நம்மள கடிச்சா  (சிறுவர்களுக்கு பாதிப்பு இருக்கும்) ஒன்னும் ஆகாது ஆனா நம்ம ஆளுங்க பயத்துல உச்சா போறதுலாம் வேற கதை, ஆனா இந்த மாதிரி பெரிய, கருப்பு, நீல தேள்களுக்கு ஆளை கொள்ளுமளவுக்கு கூட விஷம் இருக்கும்.  நான் சின்ன வயசா இருக்கும் போது (இப்பவும் சின்ன வயசுதான்) எங்க வீட்ல "தேள் கடிக்கு இங்கு மருந்து கொடுக்கப்படும்" னு போர்டு வைக்காமலே எங்கம்மா சித்த டாக்டர் ரேஞ்சுக்கு தேள் கடிக்கு தும்பைப்பூ இலையைலாம் கொடுத்து வைத்தியம் பாக்க ஆரமிச்சுட்டாங்க அத நம்பி வாரத்துல ரெண்டுபேராவது வந்து மருந்து வாங்கி சாப்பிட்டு எங்கம்மாவை
டாக்டரா ஆக்க பார்த்தாங்க ஆனா எங்க அப்பா கொட்ன கொட்டுல தேள் கொட்னதுக்கு மருந்து கொடுக்கறதா அம்மா நிறுத்திடாங்க, மேட்டர் என்னனா யாருக்காது விஷம் ஏறி போய்ட்டாங்கன்னா நீ கம்பி தான் என்னனும்னு எங்கப்பா சொன்னதோட சரி , டக்டர் ஆகற ஆசைல தும்பை செடியை போட்டு மூடிட்டாங்க எங்க அம்மா . அதுக்கு அப்புறம் எங்க அம்மாவோட பேஷண்ட்லாம் என்ன ஆனாங்கனு  தெரியல....








பயணம் தொடரும்...

No comments:

Post a Comment