Tuesday, January 2, 2018

கடப்பா உனக்கு.. மடப்பா எனக்கு..

இரண்டு நாள் பயணமாக ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் உள்ள பெலும் குகைகள், கந்திகோட்டா , மற்றும் லீபக்ஷி சென்று வந்தது பற்றி ஒரு பயண கட்டுரை.







இந்தியாவில் அதிகம் அறியப்படாத இடங்களின் பெலும் மற்றும் கந்திகோட்டா போன்றவைகள் அடக்கம். தற்செயலாக இணையத்தில் பார்க்கும் பொது கந்திகோட்டா பள்ளத்தாக்குகளின் படங்களை பார்த்துவிட்டு இந்தியாவில் இப்படி ஒரு இடமா என ஆச்சர்யமாக இருந்தது. மேலும் இந்த தேடுதலில் அதன் அருகிலேயே பெலும் குகைகளும் இருப்பதை தெரிந்து கொண்டேன். அந்த படங்களை பார்க்கும் போது என்னுடைய பயண லிஸ்டில் இந்த இடங்கள் முதலிடம் வந்தது. டிசம்பர் மாதம் சிறந்து என்பதால் உடனே இங்கு செல்ல தயாரானோம்.

கந்திகோட்டாவில் தங்குவதற்கு உள்ள ஒரே இடம் APTDC கெஸ்ட் ஹவுஸ் மட்டுமே. Online Reserve பண்ண முடியும், ஒரு AC ரூமுக்கு  1100 INR வருகிறது.
Room Online booking:
http://aptdc.in/aptdc/wrs/reservation/onlineBookingHotel.jsp


4.30am  மணிக்கு அலாரம் அடிச்சாலும் நாம வண்டி ஸ்டார்ட் பண்ணறதுக்கு வழக்கம் போல 6.30am ஆச்சு. டீசல் புல் பண்ணி BEGUR ல இருந்து ஏர்போர்ட் ரோடு வழியா காலைநேர பனிமூட்டம் பிளஸ் டிராபிக் இல்லாத பெங்களூரு சூப்பர்னு தான் சொல்லணும். டிராபிக் நகர்ந்து நகர்ந்து போய்கிட்டு இருந்த நம்ம காருக்கு டிராபிக் இல்லாத பெங்களூரு பார்த்ததும் ரொம்ப குஷியாடுச்சி.

பெங்களூரு ஹைதராபாத் ரோடு வழில ஹோட்டல்ஸ் ரொம்ப கம்மிதான். ஒரு ஹோட்டல மசால் தோசை இட்லி சாப்பிட்டு அனந்தப்பூர் முன்னாடியே GOOTY ரோட்ல ஒரு ரைட் எடுத்தா அதுக்கப்பறம் புல்லா  வில்லேஜ் ரோடு தான்.



இங்கு பெரும்பான்மையான இடங்கள் பாலைவனம்போல தான் காட்சியளிக்கிறது. ஜெய்ப்பூர் டூ ஜைசால்மர் போனபோது பார்த்த இடங்கள் போலவே இருந்தது. ஆனாலும் நிறைய இடங்களில் கிடைக்கிற நீரை வைத்து சொட்டுநீர் பாசன முறையில் விவசாயமும் பார்க்கிறார்கள்.

கிராமங்கள் தோறும் YSR சிலைகள், கடப்பா கல்லை கொண்டு கட்டிய வீடுகள் எல்லாம் தாண்டி பெலும் அடைவதற்கு 11.30 ஆகிவிட்டது. குகைக்கு செல்லும் வழியில் புத்தர் சிலை நம்மை வவேற்கிறது. சூரிய ஒளியில் பிரகாசத்தில் புத்தர் சிலை பார்க்க அருமையாக இருந்தது.

பெலும் குகை (Belum Caves) இந்தியத் துணைக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய குகையும் இந்திய துணைக்கண்டத்தில் சமவெளியில் அமைந்த நீளமான குகையும் ஆகும். இது, இங்குள்ள கூரைப்படிகக் கூம்பு மற்றும் படிகப்புற்று அமைப்புகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறது. நீண்ட வழிகளும், பெரிய அறைகளும் நன்னீர் காட்சிகளும் வடிகுழாய்களும் இக்குழாயில் காணப்படுகின்றன. இது நிலத்தடி நீரோட்டத்தால் நிலத்திற்கடியிலமைந்த இயற்கைக் குகை. "பிலும்" என்ற சமசுகிருத வார்த்தையிலிருந்து இக்குகையின் பெயர் அமைந்துள்ளது. தெலுங்கில் இக்குகை "பெலும் குகாலு" என அழைக்கப்படுகிறது. இதன் நீளம் 3229 மீட்டர்கள் ஆகும்.
1884 இல் பிரித்தானிய நிலவியல் ஆய்வாளரான இராபர்ட் புருசு ஃபூட்டால் இக்குகை கண்டறியப்பட்டது. 1982-84 இல் ஜெர்மானியக் குகை ஆய்வாளர் ஹெச். லேனியல் கெபார் (H Daniel Gebauer) தலைமையிலமைந்த குழுவால் மேலும் ஆய்வு செய்யப்பட்டது. அதன்பிறகு 1988 இல் ஆந்திரப்பிரதேச அரசால் பாதுகாக்கப்பட்டப் பகுதியாக அறிவிக்கப்பட்டது, 2002 இல், ஆந்திரப் பிரதேச அரசின் சுற்றுலாத்துறையால் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட்டது. 3.5 கிமீ நீளம் வரை குகை ஆய்வு செய்யப்பட்டிருப்பினும் 1.5 கிமீ வரைமட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.





நபர் ஒன்றுக்கு 65 ருபாய் டிக்கெட் செலுத்த வேண்டும். கொஞ்சம் ஓவர் தான். சில படிக்கட்டுகள் இறங்கி உள்ளே சென்றால் ஒரு ஹால் நம்மை வரவேற்கிறது. அங்கிருந்து இந்த குகை ஆரம்பித்து 3 கிலோமீட்டர் பரப்பளவிற்கு பூமியில் அடியில் பறந்து விரித்துள்ளது. குகைக்கு மேலே விவசாயம் எல்லாம் ஜோராக நடந்து கொண்டிருக்க உள்ளே மயான அமைதியாய் ஒரு பெரிய குகை. நீரோட்டம் இருந்ததுக்கான அடையாளம்  தெள்ளந்தெளிவாக உள்ளது. வளைந்து வளைந்துமேலும் கீழுமாக நாம் 1.5கிலோமீட்டர் வரை செல்ல முடியும். உள்ளே சில ஊற்றுகளும் பெரிய அறைகளும் கூட பார்க்க முடியும். காற்று உள்ளே வர சில துளைகள் செயற்கையை போடப்பட்டு காற்று வர வழி ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதிக கூட்டமில்லாத இந்த இடத்தை நிதானமா பார்க்கலாம். நாங்கள் உள்ளேசெல்லும் போது கரெண்ட் கட்டாகி இரண்டு நிமிஷம் கும்மிருட்டில் அசையாமல் நின்றிருந்தோம், மொபைல் சார்ஜ் டவுன். இங்கேய சும்மா சிங்கவாயில், நரி குகை என்று சொல்லிக்கொண்டு சுற்றும் ஒன்றிரண்டு கைடுகளும் உள்ளனர். ஏமாற வேண்டாம்.

1.30 மணி நேரம் உள்ளே இருந்துவிட்டு வெளியே வரும்போது பங்குனி வெயில் கூட 10டன் ஏரகண்டிஷன் ரூம் போல இருக்கு. அவளோ ஹீட் உள்ளே. அங்கேயே ஒரு சிறு ஸ்னாக்ஸ் ஷாப் இருக்கு. அங்கே பிரைட் ரைஸ் மற்றும் கீ ரைஸ் கிடைக்கிறது. லன்ச் முடித்துக்கொண்டு 2.30மணிக்கு கிளம்பி மறுபடியும் கடப்பா குவாரிகளை கடந்து ஒன்னரை மணி நேர பயணத்தில் கந்திகோட்டா சென்று அடைந்தோம்.







கந்திகோட்டாவில் தங்க.. திங்க.. இருக்கும் ஒரே இடம் ஹரிதா  APTDC கெஸ்ட் ஹவுஸ் மட்டுமே. ரூம் மற்றும் உணவு ஓகே ரகம் தான். காரை  நாம் தங்கியிருக்கும் ரூமுக்கு அருகிலேயே பார்க் பண்ண முடிகிறது.




மாடியில் இருந்து பார்க்கும் போது கோட்டை மதில் சுவர்களும் ஒரு கோபுரமும் தெரிகிறது. Refresh செய்து கொண்டு சூரிய அஸ்தமனம் பார்க்கலாம் என்று கிளம்பினோம். அங்கிருந்து 5 நிமிட பயணத்தில் கந்திகோட்டா இருக்கிறது.

கந்திகோட்டா (Gandikota) பெண்ணாறுக்கு அருகிலுள்ள ஒரு கிராமமாகும். கந்திகோட்டாவானது சக்திவாய்ந்த தெலுங்கு மரபினரான பெம்மாசனி மரபினரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இவர்களால் இங்கு கட்டப்பட்ட கோட்டையானது நாட்டின் மிக முக்கியமான கோட்டையாகவும் இருந்தது. கந்திகோட்டா என்ற பெயரில் உள்ள ‘கந்தி’ என்றால் தெலுங்கில் பள்ளத்தாக்கு என்று பொருள். கோட்டா என்றால் கோட்டை என்பதாகும். இங்கு ஒரு பெரிய பள்ளத்தாக்கு உள்ளதால் இப்படி அழைக்கப்படுகிறது.






கோட்டைக்குள்ளேயும் சில வீடுகளை பார்க்க முடிகிறது. அந்த பாதையில் கடைசியில் ஒரு மண்டபம்.

காரை பார்க் செய்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்தால் யாரும் இல்லை. அந்த மாலை வேலையில் யாருமற்ற அந்த கோட்டை சற்று பயமுறுத்துவதாவே தோண்றியது. சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வேகமாய் கணவாய் பார்க்கலாம் என்று அங்கிருந்து ஒரு 100மீட்டர் தொலைவில் பாறை  குவியலுக்கு நடுவில் சென்று பார்த்த போது  ஒரு பறந்து விரிந்த பாலை நிலம் போல் இருக்கும் அந்த இடத்தில செல்லும் அந்த கணவாய் நிச்சயம் ஒரு அருமையான காட்சிதான். தாஜ்மஹால் எப்படி புகைப்படத்திலும், சினிமாவிலும் காணும் தோற்றத்தை விட நேரில் பார்க்கும்போது வியக்க வாய்க்குமோ அப்படி தான் இந்த கணவாய் என்னை வியக்கவைத்தது. இங்கு பாயும் பென்னாறு நதியானது இங்குள்ள எர்ராமலையின் குறுக்கே ஓடுவதால் இந்தப் பள்ளத்தாக்கு ஏற்பட்டுள்ளது. பாறைகளை வெட்டி, அவற்றைக் கைகளால் அடுக்கி வைத்ததுபோல் உள்ளது.









இங்கு சிவப்பும் மஞ்சளும் பழுப்புமாகப் பல்வேறு வண்ணங்களில் பாறைகள் மிக அழகாகக் காணப்படுகின்றன. இரண்டு பக்கமும் உள்ள பாறை அடுக்குகளுக்கு நடுவே 300 அடி பள்ளத்தாக்கில் பென்னாறு ஓடுவது அற்புதமான காட்சியாக உள்ளது. வனப்பகுதிகளில் அமைந்திருக்கும் இந்த அழகிய நிலப்பரப்பு பரந்த இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது.

பார்க்கும் இடங்களில் எல்லாம் பச்சை பசேலென மரம், செடி கொடிகள் எவ்வளவு அழகோ அதேபோல் இந்த கணவாயும் இயற்கையின்  மற்றுமொரு  குழந்தைதான்.

மீண்டு காலை மற்றோருமுறை சென்று சில போட்டோக்கள் எடுத்துக்கொண்டு மதிய உணவை முடித்து கொண்டு. புறப்பட்ட நாங்கள் 5 மணி அளவில் லீபக்ஷி சென்ரோம். கோவிலில் உள்ள தொங்கும் தூண் மூலம் இந்த கோவில் பிரபலமடைந்து உள்ளது. தென் இந்தியாவில் கருங்கல்


கோவிலின் மேல்புறம் சுதை மூலம் சமப்பரப்பை உண்டாக்கி அதில்  இயற்க்கை வண்ணம் கொண்டு ஓவியம் வரையும் முறையை பார்ப்பது அரிது. இந்த கோவிலில் அப்படி சில ஓவியங்கள் காண முடிந்தது. அதிக நேரம்மின்மயால் உடனே கிளம்பி பெங்களூரு வந்தபோது மணி 10.00.

2 comments:

  1. படங்கள் அருமை. பார்க்க ஆவலை தூண்டும் இடம். இதிலேயே தங்கும் இடம் தொடர்பு எண்ணும் சேர்த்தால் பயனுள்ளதாக அமையும்.

    ReplyDelete
    Replies
    1. Thanks

      Room Online booking:
      http://aptdc.in/aptdc/wrs/reservation/onlineBookingHotel.jsp

      select Gandikotta, Haritha Resort.

      Delete